close
Choose your channels

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அவசரமாக தேவைப்பட்ட ரெம்டெசிவிர் : உடனடியாக உதவிய உள்ளங்கள்!

Monday, May 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட, அதனை அவர் டுவிட்டரில் பதிவு செய்தார். இதனை அடுத்து அவருக்கு உடனடியாக அந்த மருந்து கிடைத்துள்ளதை அடுத்து அவர் நன்றி தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தற்போது பெரும் கிராக்கி உள்ளது. அந்த மருந்து வாங்குவதற்காக மருத்துவமனைகளில் பலர் நீண்ட வரிசையில் நின்று மணிக்கணக்கில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது நண்பர் ஒருவரின் பெற்றோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு உதவும் வகையில் உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதாகவும் அவர் திருச்சியில் இருப்பதாகவும் குறிப்பிட்டு அவருடைய மொபைல் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.

தயவுசெய்து தனது நண்பருக்கு உதவவும் என ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுக்கொண்டதை அடுத்து அவருக்கு பல ரசிகர்கள் உதவி செய்ய முன்வந்தனர். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மிகவும் நன்றி எங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைத்துவிட்டது, உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.