close
Choose your channels

மீண்டும் மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதி: என்ன ஆச்சு?

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன் பின் வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தேன். தற்போது மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் இந்த மருத்துவமனையின் மருத்துவர்களை சந்திக்கும் போது மிகுந்த ஆற்றலும் மன உறுதியும் கிடைத்தது போல் இருக்கிறது. குறிப்பாக மருத்துவர் ப்ரீத்தி அவர்களுடன் பேசும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறது என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் மருத்துவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய மியூசிக் ஆல்பம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த மியூசிக் ஆல்பம் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.