close
Choose your channels

'டிமாண்டி காலனி 2' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: நாயகி, இசையமைப்பாளர் யார்?

Wednesday, November 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவான ’டிமாண்டி காலனி' என்ற திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வெறும் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 17 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 7 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தை அஜய் ஞானமுத்துபின் உதவியாளர் ஒருவர் இயக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தை அஜய் ஞானமுத்துவே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபக் மேனன் ஒளிப்பதிவில் குமரேஷ் படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக அருள்நிதி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

’டிமாண்டி காலனி’ முதல் பக்கம் போலவே இரண்டாம் பாகமும் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.