close
Choose your channels

போனிகபூரின் முக்கிய முடிவுக்கு அஜித் பெற்றோர் தான் காரணமா?

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வலிமை’ படம் குறித்து போனிகபூர் முக்கிய முடிவு எடுப்பதற்கு அஜித்தின் பெற்றோர் தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அஜித் நடித்த 'வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ஒரு காலத்தில் அப்டேட் கொடுக்கவில்லை என்று போனிகபூரை திட்டிய ரசிகர்கள் தற்போது தினமும் அப்டேட் கொடுத்து கொண்டிருக்கும் போனிகபூரை தலையில் தூக்கி வைத்து அஜித் ரசிகர்கள் ஆடி வருகின்றனர்.

உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கமான பாரிசில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கம் முதல் உள்ளூரில் உள்ள திரையரங்குகள் வரை உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வரும் 24ம் தேதி 'வலிமை’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் வினோத் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் சில அபூர்வ தகவல்களை தெரிவித்துள்ளார். அஜீத் இந்த படத்தை பார்த்ததும், ‘இந்த படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன் என்றும், இந்த படத்தை பார்த்தபிறகு ஒரு பெருமைமிக்க மகனாக உணர்ந்ததால் இந்த படத்தை தனது பெற்றோர்களுக்கு திரையிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்ததாக எச்.வினோத் கூறியுள்ளார்.

மேலும் அஜித்தின் பெற்றோர்கள் இந்த படத்தை பார்த்த பின்னர் அவர்கள் கூறிய கருத்துக்கள்தான் போனி கபூருக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது என்றும் அதன் பிறகுதான் அவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் மிகப் பெரிய அளவில் 'வலிமை’ படத்தை ரிலீஸ் செய்ய அவர் முடிவு எடுத்ததாகவும் எச். வினோத் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos