close
Choose your channels

அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் பிக்பாஸ் அக்சரா?

Saturday, February 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் பிக்பாஸ் அக்சரா சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அக்சரா என்பதும் இவர் அந்த வீட்டில் 84 நாட்கள் வரை தாக்குப் பிடித்தார் என்பது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு கொச்சி விமான நிலையத்தில் இரண்டு புர்கா அணிந்த பெண்கள் 20 கிலோ தங்கத்தை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் ஸ்ராவ்யா சுதாகர் என்றும் அவர்தான் தற்போது அக்சரா என்று பெயர் மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் அக்சரா ரெட்டிக்கு சம்பந்தம் இருப்பதாக அமலாக்கத் துறையினர் சந்தேகம் அடைந்ததை அடுத்து அவரிடம் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அக்சரா தற்போது பிக்பாஸ் வருண் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.