close
Choose your channels

விமான நிலையத்தில் வாய்ப்பு கேட்ட ஹீரோயின்! கதாநாயகியாக மாற்றிய ராஜமௌலி!

Wednesday, April 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ராஜமவுலியை, விமான நிலையத்தில் சந்தித்த போது வாய்ப்பு கேட்டதாக நடிகை ஆலியாபட் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராஜமௌலி, 'பாகுபலி' படத்தின் மெகாஹிட் வெற்றிக்கு பிறகு, தற்போது 'ஆர் ஆர் ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு முன்னணி ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் கதாநாயகனாக நடித்து வருகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க படமாக எடுக்கப்படும், இந்த படத்தில் அல்லூரி சித்தராம ராஜு மற்றும் கோமராம் பீம் ஆகிய இரண்டு, தேச விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக்கி வருகிறார் ராஜமௌலி.

மேலும் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கிறார். அஜய் தேவ்கன், மற்றும் நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து முதல்முறையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகை ஆலியா பட். இதுகுறித்து அவர் கூறுகையில்... "இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தை பார்த்தபின், அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டது. ஒருமுறை அவரை விமான நிலையத்தில் சந்தித்த போது, அவருடைய படத்தில் சிறு வேடத்திலாவது நடிக்க வேண்டும் என தானாகவே முன்வந்து வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர் தற்போது இயக்கி வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், கதாநாயகியாக வாய்ப்பு கொடுத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது" என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.