close
Choose your channels

முதல் வேலை முடிந்துவிட்டது: யுவனுடன் இணைந்து போஸ் கொடுத்த அமீர்!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து முதல் பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக இயக்குனர் அமீர் தெரிவித்து இருவரும் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெற்றிமாறன் கதையில் இயக்குநர் அமீரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது என்பதும் தெரிந்ததே.

யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் முதல் பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக இயக்குனர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கு, 22.02.2022 இந்த சிறப்பான நாளில் எனது இயக்கத்தில் உருவாகும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்திற்கான முதல் பாடலை இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுடன் சேர்ந்து கம்போஸ் செய்து முடித்திருக்கிறேன் என்பதை மகிழ்வோடு தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos