close
Choose your channels

கடலுக்கு முன் அழகுசிலை… நடிகை ஆண்ட்ரியாவின் வைரல் புகைப்படம்!

Thursday, October 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் வலம்வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. “ஆயிரத்தில் ஒருவன்“, “விஸ்வரூபம்“, “தரமணி“, “துப்பறிவாளன்“ போன்ற திரைப்படங்களில் போல்டான கேரக்டர்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்.

நடிப்பைத் தவிர இசையில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து திரைப்படங்களில் பாடுவதையும் ஆல்பங்களில் பாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், சமீபத்தில் ரிலீசான திரில்லர் திரைப்படமான “அரண்மனை3“ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது பிரபல நடன இயக்குநர் பாபி ஆண்டனி இயக்க இருக்கும் புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர “மாளிகை“, “நோ என்ட்ரி“ போன்ற படங்களில் நடித்துவரும் நடிகை ஆண்ட்ரியா சமூகவலைத் தளப்பக்கங்களிலும் படு ஆக்டிவாகச் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் “என்னை திருப்பி அழைத்துச் செல்லுங்கள்“ என்ற கேப்ஷனுடன் கடலுக்குள் முன்னாள் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.