close
Choose your channels

குறும்படம் போடுங்க: இரண்டாவது நாளே போர்க்கொடி தூக்கும் அனிதா!

Tuesday, October 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் மீண்டும் ஷிவானி கார்னர் செய்யப்பட்டதையும், இரண்டாவது புரமோவில் அனிதா சம்பத்தின் உருக்கமான காட்சிகளும் இருந்தன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள அடுத்த புரமோவில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மல்லுக்கட்டி நிற்கும் காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது

‘சுரேஷ் சக்கரவர்த்தி என்னிடம் பேசும்போது செய்தி வாசிப்பவர்களிடம் நான் பேச மாட்டேன் ஏனென்றால் அவர்களுடன் பேசும்போது எச்சில் தெறிக்கும்’ என்று கூறியதாக அனிதா சம்பத் குற்றம் சாட்டினார். ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை என்று சுரேஷ் சக்கரவர்த்தி மறுக்கின்றார்.

இவ்வாறு எச்சில் தெறிக்கும் என்று கூறுவது மூன்றாம் தரமாக உள்ளது என மீண்டும் அனிதா கூறியதோடு,வேண்டுமென்றால் குறும்படம் போட்டுப் பார்ப்போம் என்று கூற அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி ’குறும்படம் என்ன பெரும்படமே போட்டு பாருங்கள்’ என்று கூறுகிறார்

இந்த சண்டையை விலக்கி வைக்க ரேகா உள்பட மற்ற போட்டியாளர்கள் முயற்சிக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதாவது தான் குறும்படம் என்பது போடப்படும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் இரண்டாவது நாளே குறும்படம் போடுங்க என்று அனிதா சம்பத் போர்க்கொடி தூக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க இந்த சீசனில் முதலிலேயே சண்டையை ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.