close
Choose your channels

'அஞ்சாதே' படத்தில் நடித்த அக்கா-தங்கை: இவர்களில் ஒருவர் பிக்பாஸ் 6 போட்டியாளரின் மனைவியா?

Saturday, November 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’அஞ்சாதே’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பள்ளி மாணவியாக நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உண்மையிலேயே அக்கா தங்கை என்பதும் இந்த இருவரில் ஒருவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர் ஒருவரின் மனைவி என்றும் தெரிய வந்துள்ளது.

மிஷ்கின் இயக்கிய ’அஞ்சாதே’ திரைப்படத்தில் கிளைமாக்சில் பிரசன்னா 2 பள்ளி குழந்தைகளை கடத்தி வைத்து இருப்பார். அந்த குழந்தைகள் தற்போது வளர்ந்து நடிகைகளாக உள்ளனர். அவர்களில் ஒருவர் பிக் பாஸ் போட்டியாளர்களில் இன்னொருவரான மணிகண்டனின் மனைவி சோபியா என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவருடைய மனைவி தான் ’அஞ்சாதே’ படத்தில் நடித்த நடித்தவர்களில் ஒருவரான சோபியா என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’லட்சுமி’ திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அக்கா தங்கை நடிகைகள் பா ரஞ்சித் இயக்கிய ’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தில் திவ்யா, நதியா என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்து இருப்பார்கள்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் மணிகண்டன் தனது மனைவியுடன் கலந்து கொண்டிருந்தார் என்பதும் ஆனால் உடல்நலப் பிரச்சினை காரணமாக இருவரும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.