close
Choose your channels

அரசிடம் அனுமதி கேட்ட 'அண்ணாத்த' படக்குழு: அனுமதி கிடைக்குமா?

Thursday, April 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தெலுங்கானா அரசிடம் ‘அண்ணாத்த’ படக்குழுவினர் சிறப்பு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஒருசில காட்சிகளை ஐதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தெலுங்கானா அரசிடமும் ஐதராபாத் காவல் துறையிடமும் இரவு நேர படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளில் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தெலுங்கானா அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.