close
Choose your channels

1 மணி நேரத்திற்கு 5 லட்ச ரூபாய்.. பணம் கொடுத்தால் மட்டுமே இனி சந்திப்பு: திரையுலக பிரபலம் அறிவிப்பு..!

Sunday, March 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இனிமேல் என்னை சந்திக்க வருபவர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்படும் என்றும் ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் முன்கூட்டியே பணம் கொடுக்க வேண்டும் என்றும் திரை உலக பிரபலம் ஒருவர் நிபந்தனை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் அதேபோல் விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் ’சினிமா சம்பந்தமாக என்னை யாராவது சந்திக்க வந்தால் அவர்கள் பணம் செலுத்த வேண்டும், 10 முதல் 15 நிமிடங்கள் என்றால் ஒரு லட்ச ரூபாய், 30 நிமிடங்கள் என்றால் 2 லட்சம் ரூபாய், ஒரு மணி நேரம் என்றால் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும், அந்த பணத்தை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

பல சந்திப்புகள் எனது நேரத்தை வீணடித்து விட்டது, சினிமா சம்பந்தமாக என்னை சந்திக்க பலர் வருகின்றனர், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சில படங்களை ஊக்குவித்தேன், ஆனால் தன்னை ஜீனியஸ் என்று நினைத்துக் கொண்டு வருபவர்களிடம் இனி நான் என் நேரத்தை இலவசமாக செலவழிக்க விரும்பவில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எனவே இனி உங்களால் இந்த பணத்தை கொடுக்க முடியும் என்றால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள், இல்லையென்றால் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார், இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.