close
Choose your channels

மண்ட மேல கம்பால போட்ட அர்ச்சனா கல்பாத்தி.. கையெடுத்து கும்பிட்ட வெங்கட் பிரபு..!

Monday, April 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கம்பை எடுத்து வெங்கட் பிரபு தலையில் போட அதற்கு அவர் கையெடுத்து கும்பிட்டு உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது ’கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருக்கும் நிலையில் படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே,. அந்த வகையில் சற்று முன் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் ஒரு பெரிய கம்பை எடுத்து வெங்கட் பிரபு தலையின் மேல் வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தின் கேப்டனாக ’என்னுடைய நாள் எனது இரண்டு அழகான தயாரிப்பாளர்களால் தொடங்கியுள்ளது என்று வெங்கட் பிரபு கூறி, ‘கோட்’ தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி பார்த்து மற்றும் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகிய இருவரையும் கையெடுத்து கும்பிட்டவாறு உள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு பின்னணியாக ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் நடித்த ‘படிக்காதவன்’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த பாடல் பின்னணியில் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.