close
Choose your channels

தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்த விவகாரம்.. நீதிமன்றத்தில் இருவரும் சேர்ந்து மனு தாக்கல்..!

Monday, April 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்த நிலையில் தற்போது சட்டப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் இருவரும் சேர்ந்து மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தங்களது சமூக வலைத்தளத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இருப்பினும் இருவரும் சட்டப்படி விவாகரத்துக்கு ஒரே மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜா வீட்டினர் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்ததாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சட்டப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்க கோரி இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.