ரஜினி என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை, இதை மீண்டும் மீண்டும் சொல்வேன்: அர்ஜூன் சம்பத்

ரஜினிகாந்த் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும் இதனை சொல்வேன் என கரூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் வெற்றி பெற்றால் தான் கட்சி தலைவராக மட்டும் இருந்து கொண்டு வேறொருவரை முதல்வராக தேர்வு செய்ய திட்டமிட்டிருப்பதாக ரஜினி கூறியதாக செய்திகள் வெளியானது. இதனை மாவட்ட செயலாளர்கள் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தான் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் முதல்வர் பதவியை இன்னொருவருக்கு விட்டுகொடுத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளை சசிகலா இன்னும் சந்தித்து வருகிறார் என்றும் ஏற்கனவே பேட்டியில் அர்ஜுன் சம்பத் கூறியிருந்தார். இதனையடுத்து இன்று கரூரில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் பேசியபோது ’கட்சிப் பொறுப்பில் இருந்துகொண்டு முதல்வர் பதவியை வேறொருவருக்கு வழங்கும் ரஜினியை கருத்தை தான் நிராகரிப்பதாகவும் ரஜினி எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டவர் இல்லை என்றாலும் அவர் தான் முதல்வராக வரவேண்டும் என்றும் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க அவர் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் இந்த கருத்தை திரும்ப திரும்ப சொல்வதால் அவர் என் மீது கோபப்பட்டாலும் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை என்று பேசியுள்ளார். அர்ஜுன் சம்பத்தின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

பிணத்தின் கையை சமைத்துக் கொடுத்த அன்பு கணவன்; தலைதெறிக்க ஓடிய மனைவி

உத்திர பிரதேசத்தில் ஒரு அன்பு கணவர் மனைவிக்காகச் பிணத்தின் கையைச் சமைத்துக் கொடுத்து இருக்கிறார். என்னவென்று தெரியாமல் சாப்பிட்ட மனைவி வாந்தி எடுத்து,

'ஓ மை கடவுளே' வாணி போஜனால் பாதிப்பு அடைந்த தொழிலதிபர்: பெரும் பரபரப்பு

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'ஓ மை கடவுளே'. அசோக்செல்வன், ரித்திகாசிங், ரக்சன், வாணிபோஜன் நடித்த இந்த படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது

அண்ணன் வந்தா ஆட்டம்பாம்: வைரலாகும் 'வாத்தி' பாடல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்ட'ர் படத்தில் இடம்பெற்ற 'வாத்தி இஸ் கம்மிங்' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சரியாக 5 மணிக்கு வெளியாகி இணையதளங்களை

துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த எம்.எஸ்.சி படிக்கும் பெண்..!

இந்த விழாவில் கோவை தெலுங்குப்பாளையாத்தைச்  சேர்ந்த மோனிகா என்பவருக்கு பணிநியமன ஆணையானது வழங்கப்பட்டது. இவர் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா??? காங்கிரஸ்க்கு எதிராகத் திரும்பியது ஏன்??? 

மத்தியப் பிரதேச சட்ட சபையில் முதல்வர் கமல்நாத்தின் ஆட்சி தொடருமா? என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்