close
Choose your channels

அட்லியுடன் இணையும் சந்தானம்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு

Monday, January 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய்யின் அடுத்த படத்தையும் அட்லி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் வரும் 31ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ’டகால்டி’. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சந்தானத்தின் பிறந்தநாள் என்பதால் இந்த அறிவிப்பு ஆச்சரியமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி என்ன ஆச்சரிய அறிவிப்பு வரப்போகிறது என்பதை நாளை காலை 11 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

முதல்முறையாக சந்தானம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos