close
Choose your channels

சொன்ன வார்த்தையை காப்பாற்றுங்கள்: ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை

Sunday, June 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த சில மாதங்களாக அவரை பிரபல அரசியல்வாதிகளும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரையுலக பிரமுகர்களும் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு அவர்கள் ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஏற்கனவே வாக்குறுதி கொடுத்தபடி தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி ரூ.1 கோடி தருவதாக கூறியது குறித்து அவரிடம் அய்யாக்கண்ணு மனு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினியின் சகோதரர் 'ரஜினி ஏற்கனவே நதிநீர் இணைப்புக்கு அறிவித்தபடி ரூ.1 கோடியை வங்கியில் ஏற்கனவே, 'டிபாசிட்' செய்து விட்டதாகவும், நதிநீர் இணைப்பு பணிகள் துவங்கும்போது, சம்பந்தப்பட்டோரிடம் அந்த பணத்தை தருவார் என்றும், சொன்னால் சொன்னபடி செய்வார்; அது தான் ரஜினிகாந்த் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.