close
Choose your channels

மம்முட்டி-சரத்குமாருடன் கனெக்ஷன் ஆகும் 'பாகுபலி 2'

Tuesday, December 29, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பிரமாண்டமான படம் என்ற பெருமையை பெற்ற 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமாரும் கேரளாவில் லொகேஷன் பார்த்துவிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


கேரளாவில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் ஒன்று கண்ணூர் எனப்படும் ஒரு பகுதி. இந்த பகுதியில்தான் மம்முட்டி, சரத்குமார் நடித்த 'பழசிராஜா' என்ற சரித்திர படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பழசிராஜா' படப்பிடிப்பு நடத்தப்பட்ட அதே லொகேஷனைத்தான் ராஜமவுலியும், செந்தில்குமாரும் பார்த்துவிட்டு சென்றுள்ளதாகவும், விரைவில் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு இந்த இடத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.