close
Choose your channels

5 வது காதலுக்கு இடையூறு: ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த படுபாதக தாய்!

Friday, March 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐந்தாவது காதலுக்கு இடையூறாக இருந்ததால் மூன்றாவது காதலனுக்கு பிறந்த ஒரு வயது குழந்தையை மது கொடுத்து கொலை செய்த படுபாதக தாய் ஒருவர் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, கார்த்திக் என்பவரை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து நான்காவதாக ஒருவரை இன்ஸ்டாகிராமிலும், ஐந்தாவதாக ஒருவரை தனது ஏரியாவில் உள்ளவரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் கீதாவின் நடவடிக்கை பிடிக்காததால் மூன்றாவது கணவர் கார்த்திக் தனது மூன்று வயது மகனுடன் தனியே சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தனது ஒரு வயது ஆண் குழந்தை மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனைக்கு கீதா எடுத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறைக்கும் அவர்கள் தகவல் அளித்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது நான்காவது மற்றும் ஐந்தாவது காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஒரு வயது குழந்தைக்கு சோற்றில் மது கலந்து கொடுத்து கொலை செய்து விட்டது தெரிய வந்தது. இந்த கொடூரக்கொலை குறித்த தகவல் பிரேத பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து போலீசார் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.