close
Choose your channels

மாறி மாறி பழிவாங்கிய வனிதா-பாலா: வேதாள விளக்கு படும்பாடு!

Saturday, February 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 12 போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர். குறிப்பாக வனிதா மற்றும் பாலா இடையே கடந்த சில நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டதால் பார்வையாளர்களுக்கு சுவராசியமாக உள்ளது.

இந்நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பிக்பாஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த தொலைபேசி அழைப்பை எடுத்த வனிதாவுக்கு வேதாள விளக்கு ஒன்றை பிக்பாஸ் கொடுக்கிறார். இந்த விளக்கை வைத்திருப்பவர்கள் உட்காரவோ, தூங்கவோ கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது.

ஆனால் பஸ்ஸர் அடித்தவுடன் அந்த விளக்கை தனக்கு பிடிக்காத ஒருவரிடம் கைமாற்றிக்கொள்ளலாம் என்று பிக்பாஸ் தெரிவிக்கின்றார். இதனை அடுத்து விளக்கை கையில் வைத்திருக்கும் வனிதா, பஸ்ஸர் அடித்தவுடன் பாலாவிடம் கொடுக்கிறார். இந்த வீட்டில் நீ தான் அதிகமாக தூங்குகிறாய், உட்கார்ந்திருக்கிறாய் என்ற காரணத்தையும் அவர் கூறுகிறார்.

அந்த விளக்கை வாங்கி கொள்ளும் பாலா, மீண்டும் பஸ்ஸர் அடித்தவுடன் அந்த வகையில் மீண்டும் வனிதாவிடம் கொடுக்கிறார். ஆக இருவரும் மாறி மாறி வேதாள விளக்கை மாற்றி கொண்டு பழிவாங்கும் போக்கில் நடந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.