close
Choose your channels

தமிழகத்தின் முக்கிய நகரில் 'பீஸ்ட்' ரிலீஸ் இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tuesday, April 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தின் முக்கிய நகரத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என அந்நகரத்தின் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் அனைத்தும் முடிந்த நிலையில் நாளை பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள ‘பீஸ்ட்’ படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்க்க ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை கரூர் நகராட்சி திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என கரூர் தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்தம் விதிமுறை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக இந்த முடிவை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி விட்டன.

கரூரில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகாது என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று இந்த படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.