close
Choose your channels

ஜோதிகாவின் அடுத்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை

Thursday, July 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடித்த '36 வயதினிலே' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதும் ஏற்கனவே தெரிந்ததே.
இந்நிலையில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகையும் தற்போது இணைந்துள்ளார். கமல், ரஜினி, விஜய்காந்த், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ் உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பானுப்ரியா இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாகவும், அவருக்கு இந்த படம் நிச்சயம் நல்ல பெயரை வாங்கித்தரும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். பானுப்ரியா கடைசியா ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தில் தனுஷ் அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்களும் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜோதிகாவின் முந்தைய படமான '36 வயதினிலே' படம் போல் இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த படம் சுவாரசியான கேரக்டர்கள் அடங்கிய அனைத்து தரப்பினர்களும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும் இயக்குனர் பிரம்மா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.