close
Choose your channels

இன்னும் பெரிய விஷயமெல்லாம் இருக்கு, அப்புறமா சொல்றேன்.. பணமூட்டையுடன் வெளியேறிய கதிரவனின் முதல் பதிவு!

Thursday, January 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை தாண்டி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும்.

இந்த நிலையில் இந்த சீசனில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் பணமூட்டை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அந்த மூட்டையில் இருந்த மூன்று லட்ச ரூபாயை எடுத்துச் செல்லும் போட்டியாளர் யார் என்ற கேள்வி எழுந்திருந்தது. கிட்டத்தட்ட அனைவரும் கணித்தபடியே கதிரவன் அந்த பணமூட்டையை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

ஏற்கனவே அவருக்கு சுமார் 20 லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பணமூட்டையில் உள்ள 3 லட்ச ரூபாய் சேர்த்து 23 லட்சம் கிடைத்துள்ளதாக கூடப்படுகிறது.

இந்த நிலையில் பணமுட்டையுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கதிரவன் தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்தது மிக பெரிய அனுபவம், அவ்வளவு பெரிய வீட்டில் இருந்துவிட்டு இப்போது என்னுடைய வீட்டை பார்க்கும்போது மிகவும் சிறிதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் நான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, இன்னும் நிறைய பெரிய விஷயம் எல்லாம் இருக்கிறது, அதை அப்புறம் சொல்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குழுவில் வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.