close
Choose your channels

பிக்பாஸ் குறித்து கணவரின் பதிவு.. நெகிழ்ச்சி அடைந்த ரக்சிதாவின் பதில்..!

Sunday, January 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கணவரின் பதிவுகளால் நெகிழ்ச்சி அடைந்த ரக்சிதா பதில் பதிவு செய்துள்ளதை அடுத்து தற்போது பிரிந்து இருக்கும் இருவரும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் ஆறாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவரான ரக்சிதா கிட்டத்தட்ட கடைசி நேரம் வரை தாக்குப்பிடித்து இருந்தார் என்பதும் அவருக்கு பொதுமக்களின் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரக்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவருக்கு எதிராக பரப்பப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு அவரது கணவர் பதிலடி கொடுத்திருந்தார் என்பதும் ரக்சிதாவுக்கு ஆதரவாக அவ்வப்போது பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ரக்சிதா கணவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ’பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் ரக்சிதாவை 24 மணி நேரமும் என்னால் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், நீங்கள் உண்மையில் பல கோடி இதயங்களை வென்று உள்ளீர்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்த ரக்சிதா எனக்கு ஆதரவாளித்த அனைவருக்கும் மிக்க நன்றி, நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் மறைமுகமாக சமூக வலைதளங்கள் மூலம் பேசிக் கொள்ளும் ரக்சிதாவும், அவருடைய கணவரும் விரைவில் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.