close
Choose your channels

குற்றவாளி கூண்டில் அசீம், வழக்கறிஞராக மாறி திணறடித்த விக்ரமன்.. நீதிபதி யார் தெரியுமா?

Wednesday, November 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் தற்போது நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நீதிமன்றத்தில் நீதிபதியாக ஏடிகே இருந்தார் என்பதும் விக்ரமன் மீது சுமத்தப்பட்ட வழக்கில் விக்கிரமனுக்கு ஆதரவாக ஷிவின் வாதாடினார் என்பதும், விக்ரமனுக்கு எதிராக அசீம் வாதாடினார் என்பதும் தெரிந்ததே.

மேலும் நேற்று நீதிபதி ஏடிகே வழங்கிய தீர்ப்பில் முரண்பாடு இருந்ததை அடுத்து பிக்பாஸே தீர்ப்பு குறித்து சந்தேகம் கேட்க, நீதிபதி மீது ஷிவின் சரமாரியாக குற்றஞ்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்றைய நீதிமன்ற டாஸ்க்கில் அசீம் சாவியை எடுத்து வைத்தது டாஸ்க்கின் தந்திரமே தவிர ஏடிகே மீதான காழ்ப்புணர்ச்சி அல்ல என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்தவர் அசீம் என்பதும் அவருக்கு ஆதரவாக ஷிவின் வாதாடப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அசீமுக்கு எதிராக விக்ரமன் வழக்கறிஞராக களமிறங்கி அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு அசீமை திணறடிக்கும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன. இன்றைய நீதிமன்ற டாஸ்க்கில் ராம் நீதிபதியாக உள்ளார். இன்று நடைபெறும் டாஸ்க்கில் வெற்றி பெறும் அணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.