close
Choose your channels

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்.. நேரடியாக இறுதிக்கு தகுதி பெறும் போட்டியாளர் யார்?

Tuesday, January 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 15 நாட்களே மீதமிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். தற்போது இருக்கும் 8 போட்டியாளர்களில் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் ஒரு கடுமையான டாஸ்க் மூலம் அந்த நபர் தேர்வு செய்யப்படுவார் என்பதையும் கடந்து 5 சீசன்களில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த ஆறாவது சீசனிலும் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் வைக்கப்படுகிறது.

கடும் போட்டி சோதனைகள் என பலவற்றைக் கடந்து இறுதிக்கு செல்லும் முதல் போட்டியாளர் யார் என தீர்மானிக்கும் வாரம் இது என பிக்பாஸ் அறிவிக்கின்றார். வார இறுதியில் எந்த நபர் அதிக புள்ளிகள் எடுக்கிறாரோ அவருக்கு டிக்கெட்டு டு ஃபினாலே வழங்கப்பட்டு நேரடியாக இறுதி போட்டிக்கு அனுப்பப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை மிகுந்த சிரத்தையுடன் செய்து வரும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன. நேரடியாக இறுதிக்கு செல்லும் அந்த போட்டியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.