close
Choose your channels

கேப்டன் பதவியேற்ற பாவனிக்கு இதுதான் தண்டனை: அக்சரா தந்த அதிர்ச்சி தகவல்

Monday, December 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்களை, கேப்டன் பதவியை ஏற்கவிடாமல், தனது நாணயத்தின் சக்தி மூலம் கேப்டன் ஆகி வரும் நிகழ்வுகள் கடந்த சில வாரமாக பிக் பாஸ் வீட்டில் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் கேப்டன் டாஸ்கில் வெற்றி பெற்ற அமீர் கேப்டன் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது நாணயத்தின் சக்தியால் பாவனி அவருடைய கேப்டன் பதவியை பறித்துக் கொண்டார் என்பதை முதல் புரமோவில் பார்த்தோம்.

இந்த நிலையில் இவ்வாறு நாணயத்தின் மூலம் கேப்டன் பதவியை பெறுபவர்களுக்கு பிக்பாஸ் ஒரு தண்டனை அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று கேப்டன் பதவியை ஏற்கும் பாவனி, பிக் பாஸ் வீட்டில் உள்ள மூன்று பெண்கள் சொல்லும் எந்த வேலையையும் செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார் இதனை அடுத்து ’உங்களுக்கு டீ வேண்டுமா? சாப்பாடு வேண்டுமா? உங்கள் படுக்கையை சுத்தம் செய்ய வேண்டுமா? சொல்லுங்கள் நான் செய்து தருகிறேன் என்று பாவனி கூற, அதற்கு அக்சரா, ‘இந்த வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்கும் பெர்சனல் உதவி மட்டுமின்றி நாங்கள் எந்த வேலை சொன்னாலும் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றும் அது தான் உங்களுக்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை என்றும் விளக்குகிறார்

இதனால் அதிர்ச்சி அடைந்த பாவனி, ‘அப்படிப் பார்த்தால் நீங்கள் உங்கள் வேலை முழுவதையும் என் தலையில் சுமத்தி விடுவீர்களே’ என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது.

மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அக்சரா, தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய மூவரும் பாவனியை இந்த வாரம் வச்சு செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.