close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்சிதா .. பிரிந்து போன கணவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

Tuesday, October 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா குறித்து அவரை பிரிந்து வாழும் கணவரின் சமூக வலைதள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் பிரபல சீரியல் நடிகை ரக்சிதா என்பது தெரிந்ததே. அவர் கடந்த இரண்டு நாட்களில் மிகவும் பிரமாதமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரக்சிதா, அதன்பின்னர் ’சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து பிரபலமானார். அதன் பின் அவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரக்சிதா, திருமணத்திற்கு பின்னரும் பல சீரியல்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் திடீரென தினேஷ் மற்றும் ரக்சிதா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தனித் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரக்சிதாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் அவரை பிரிந்து வாழும் அவரது கணவர் தினேஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ’பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலரது இதயங்களை வெல்ல ரக்சிதாவுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்

கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை விட்டு பிரிந்த ரக்சிதா வெற்றி பெற அவரது கணவர் தினேஷ் வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.