close
Choose your channels

தலையெழுத்து எப்படி மாறப்போகிறதோ? பிக்பாஸ் சஞ்சீவ் மனைவியின் பதிவு!

Thursday, November 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட்கார்டு போட்டியாளராக தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தலையெழுத்து எப்படி மாறப்போகிறதோ’ என்று பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் பிரபல தொலைக்காட்சி நடிகை பிரீத்தி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் இருவரும் தற்போதும் கூட சின்னத்திரையில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சீவ் இன்று என்ட்ரி ஆகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் என்பதால் விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தன்னுடைய கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவருடைய மனைவி ப்ரீத்தி, ‘தன்னுடைய கணவரை வெளியே இருக்கும் போது எப்படி ரசித்துக்கொண்டு இருந்தேனோ, அதேபோல் பிக்பாஸ் வீட்டிலும் அவர் இருப்பதை ரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும், ஆனால் தலையெழுத்து எப்படி மாறப்போகிறது என்று தெரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருடைய பதிவுக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் அளித்து வருகின்றனர் என்பதும் சஞ்சீவ் கண்டிப்பாக டைட்டிலை வெல்வார் என்றும் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.