பதில் சொல்லிட்டு போங்க: சுரேஷை வச்சு செஞ்ச வேல்முருகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சுரேஷ் சக்ரவர்த்தி இதுவரை யாருடன் சண்டை போடவில்லை என்பதை மட்டும்தான் கணக்கு பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது. கிட்டத்தட்ட அனைவரிடமும் கேலியும் கிண்டலுமாக பேசி வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார் என்பது கடந்த ஒரு வார நிகழ்ச்சியில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் அப்பாவியாக வெள்ளேந்தியாக இருந்து வரும் பாடகர் வேல்முருகன் இன்று சுரேஷூக்கு எதிராக பொங்கி எழுந்த காட்சிகள் இன்றைய இரண்டாம் புரமோவில் உள்ளது சமீபத்தில் டாஸ்க் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சுரேஷ் சக்ரவர்த்தி தனக்கு வேஷ்டி கொடுத்ததாக பாடகர் வேல்முருகன் தெரிவித்திருந்தார். அந்த வேஷ்டி கொடுத்ததை சுரேஷ் சொல்லிக் காட்டி இருப்பார் போல் தெரிகிறது.

இதனால் பொங்கி எழுந்த வேல்முருகன் ’நான் உங்களிடம் வேஷ்டியை கேட்டேனா, அதை ஏன் சொல்லிக்காட்டி அசிங்க படுத்துகிறீர்கள்’ என்று ஆவேசமாக கூற, அவரை சமாளிக்க முடியாமல் சுரேஷ் நழுவ முயற்சிக்கிறார். ஆனாலும் விடாமல் வேல்முருகன் அவரை துரத்தி துரத்தி வந்து ஆவேசமான அவரை கேள்வியால் துளைத்தெடுப்பது சக போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆனால் வேல்முருகனின் கோபத்தை கண்டுகொள்ளாமல் சாப்பிட ஆரம்பிக்கும் சுரேஷ், ‘பரட்டை பத்த வச்சிட்டியே’ பரட்ட’ என்று கூறுவதுடன் இரண்டாம் புரமோ முடிவு பெறுகிறது.

ஏழைகளுக்கு தன்மானம் அதிகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் அவரிடமும் தனது வேலையை காட்டிய சுரேஷ் சக்கரவர்த்திக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

More News

பூனை வளர்க்க ஆசைப்பட்டு புலிக்குட்டியை வளர்த்துவிட்ட தம்பதி… சுவாரசியச் சம்பவம்!!!

பிரான்ஸ் நாட்டில் ஒரு தம்பதி ஆன்லைனில் பூனைக்குட்டி வாங்கி வளர்க்க முடிவு செய்து விபரீதத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.

9 வயதில் மோட்டார் பைக் சாம்பியன்… தமிழகச் சிறுவனின் தெறிக்கவிடும் சாதனை!!!

செல்போன் திரையைத் தொட்டு விடீயோ கேம் விளையாடும் வயதில் பைக்கை பேய் வேகத்தில் ஓட்டுகிறான் தமிழகத்தைச் சேர்ந்த சுஜன்

ஜாலியா ஒரு டூர்… சுற்றுச்சூழல் காக்கும் அலையாத்தி காடுகள்…

கடல் எனும் பேரக்கன் அதன் எல்லையில் இருக்கும் வரையில்தான் எல்லோருக்கும் நல்லது. ஒருவேளை கரையைத் தாண்டி வந்தால் நிலைமை அவ்வளவுதான்.

குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி: ஆச்சரிய தகவல் 

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா பணிக்கு திரும்பி கைக்குழந்தையுடன் பணி செய்து கொண்டிருக்கும் புகைப்படம்

தோனிக்காக வீட்டை மஞ்சள் நிறமாக மாற்றிய வெறித்தனமான ரசிகர்!

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. தல தோனி உள்பட சென்னை அணியின் வீரர்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பி வருகின்றனர்.