close
Choose your channels

கவின், முகினை கண்கலங்க வைத்த டெலிபோன் அழைப்புகள்

Sunday, August 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஞாயிறு அன்று பார்வையாளர்களில் ஒருவர் தொலைபேசி மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களை தொடர்பு கொண்டு கேள்வி கேட்கும் வழக்கம் இந்த சீசன் முதல் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை பலர் சாண்டி, லாஸ்லியா உள்பட பலரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் தற்போது கவின், முகின் ஆகிய இருவருக்கும் இருவர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது அவர்கள் இருவரை மட்டுமின்றி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

கவினை அழைத்த தொலைபேசி அழைப்பாளர், 'கவின் கலையுலக நாயகனாக வளர என்னுடைய வாழ்த்துக்கள் என்றும், வாய்ப்பு கொடுக்க மறுத்தவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டினால் மட்டும் போதாது வளர்ந்தும் காண்பிக்க வேண்டும்' என்று ஆசி வழங்கினார்.

இதனையடுத்து முகினின் ஆசிரியை ஒருவர் தொலைபேசியில் கூறியபோது, 'நான் தான் முகினின் ஆசிரியை. வகுப்பில் தினமும் ஏதாவது செய்துவிட்டு முகின் என்னிடம் வந்துவிடுவார். ஏன் என்னிடம் அன்றாடம் முகின் வருகிறார் என நான் யோசித்தபோது அவர் எனது அன்பை தேடித்தான் வந்துள்ளார் என்பதை புரிந்து கொண்டேன்' என்று கூற முகின் கண்கலங்கிவிட்டார். இன்றைய இரண்டாவது புரமோ அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.