கவினுக்காக வாக்குவாதத்தில் லாஸ்லியா-சாக்சி

பிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக கடந்த சில வாரங்களாக வலம் வந்து கொண்டிருந்த கவின் தற்போது பரிதாபமாக தேவதாஸ் போல் உள்ளார். தனக்கும் சாக்சிக்கும் உள்ள உறவு குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை என இன்றைய முதல் புரமோவில் கவின் கூறிவிட்ட நிலையில் கவின் - சாக்சி காதல் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் உள்ள உறவு குறித்து இன்றைய மொட்டை கடிதம் டாஸ்க்கில் கேள்வி எழுகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த லாஸ்லியா, 'தனக்கு கவின் ஒரு நல்ல நண்பர் என்றும், எங்களுக்கு இடையே உள்ள உறவு குறித்து நான் யாரிடமும் சென்று விளக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றும் கூற, இதற்கு சாக்சி கோபமாக குறுக்கிட, இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கின்றது. இதனை பரிதாபமாக வழக்கம்போல் கவின் வேடிக்கை பார்க்கின்றார்.

வனிதா, மீரா வெளியேறிய பின்னர் பிக்பாஸ் வீட்டில் அமைதி திரும்பும் என்று அனைவரும் எண்ணி கொண்டிருக்கையில் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் சாக்சி மூலம் டுவிஸ்ட் வைத்துள்ளனர். இன்னும் ஒருசில வாரங்களுக்கு சாக்சி, கவினுக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பிரச்சனை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் 100வது நாளில் கூட சண்டை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

More News

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் சூப்பர் ஹிட் பட நாயகி!

'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய படங்களை அடுத்து பிக்பாஸ் புகழ் ஹரீஸ் கல்யாண் தற்போது நடித்து வரும் படம் 'தாராள பிரபு.

அஜித் படத்தின் ரிலீசுக்கு மறுநாள் உதயநிதி ரிலீஸ் செய்யும் படம்!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் விக்ராந்த் நடித்த 'பக்ரீத் என்ற படத்தை ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் 

மோகன்லால் இயக்கும் முதல் படத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்

பிரபல நடிகர் மோகன்லால் மலையாலத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானவர். கடந்த 40 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக

கவினுக்கு வந்த மொட்டை கடிதங்கள்: சாக்சி கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன், வனிதா ஆகிய இரண்டு சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஓரளவிற்கு போட்டியாளர்கள் அமைதியாக உள்ளனர்.

சன்னிலியோனால் என் நிம்மதியே போச்சு: போலீசில் புகார் அளித்த இளைஞர்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனால் தனது வாழ்க்கையின் நிம்மதியே போய்விட்டதாக டெல்லி போலீசார்களிடம் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது