close
Choose your channels

10 வருடம் கழித்து தந்தையை சந்திக்கும் லாஸ்லியா! நெகிழ்ச்சியான அனுபவம்

Wednesday, September 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் அவர் தன்னுடைய தந்தையை நேரில் பார்த்தே பத்து வருடங்கள் ஆகிவிட்டதாகவும், இலங்கையில் போர் நடந்தபோது பிரிந்த பின்னர் இன்னும் தான் தன்னுடைய தந்தையை பார்க்கவில்லை என்றும் சக போட்டியாளர்களிடம் கூறியிருந்தார்.

இருப்பினும் சேரனை தன்னுடைய தந்தை ஸ்தானத்தில் பார்த்து திருப்தி அடைந்தார். சேரனும் தனது சொந்த மகளை போல் லாஸ்லியாவை கவனித்து கொண்டார். இருவருக்குமான உறவில் அவ்வப்போது சிறு பிணக்குகள் வந்தபோதிலும் இந்த உறவு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தாண்டி நீடிக்கும் என்றே கருதப்பட்டது

இந்த நிலையில் நேற்று முதல் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர். நெற்று முகினின் தாயார் மற்றும் தங்கை வந்திருந்த நிலையில் இன்று லாஸ்லியாவின் தந்தை வருகிறார். அவர் வருவதற்கு முன்னரே' ஆனந்த யாழை மீட்டுகிறாய்'' என்ற தந்தையின் பெருமை பேசும் அருமையான பாடல் ஒலிக்கப்படுவதால் லாஸ்லியா தனது தந்தை தான் வருகிறார் என்பதை புரிந்து கொண்டு அவர் வருவதற்கு முன்னரே கதறி அழுகிறார்.

லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்ததும் இருவருக்கும் பேச்சே வரவில்லை. இந்த நெகிழ்ச்சியான சந்திப்பால் மற்ற போட்டியாளர்களின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீரை பார்க்க முடிகிறது. இனி கவின் - லாஸ்லியா காதல் குறித்து லாஸ்லியாவின் தந்தை என்ன சொல்ல போகிறார்? கவினின் நிலை என்ன? என்பதே இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என கருதப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.