close
Choose your channels

மீண்டும் சேரனை குறிவைத்த மீராமிதுன்

Tuesday, July 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன், ஒவ்வொருவராக குறிவைத்து அவர்களை டென்ஷாக்கி அவர்களுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கித்தரும் வேலையை செய்து வருகிறார். கடந்த வாரம் நடந்த கடிகார டாஸ்க்கில் ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக்கி, சாக்சியை மீட்டிங் போட வைத்து அதன்பின்னர் திடீரென பின்வாங்கி சாக்சியை கெட்டவர் போல் ஆக்கிவிட்டார். குறும்படத்தில் சாக்சி தான் மீட்டிங் அரேஞ்ச் பண்ணுவதாக சொல்லியிருந்தாலும் இந்த விஷயத்தை பெரிதாக்கியது மீராதான் என்பதை எல்லோரும் மறந்துவிட்டனர்.

தன்னைவிட வேறு யாராவது ஒருவரை கெட்டவராக்கிவிட்டால் அந்த வார நாமினேஷனில் இருந்து தான் தப்பிவிடலாம் என்ற ஐடியாவில் செயல்பட்டு வரும் மீரா, இந்த வாரம் குறி வைத்திருப்பது சேரனை. கிராமத்து டாஸ்க்கில் அவரிடம் வம்பிழுத்து அவரை டென்ஷனாக்கி அதன் பின்னர் 'கத்தி பேசக்கூடாது' என்று அவர் பேசிய டயலாக்கையே அவருக்கு ஞாபகப்படுத்துகிறார். இதன் மூலம் சேரனை கெட்டவராக்கும் அவரது முயற்சி கிட்டத்தட்ட பலித்துவிட்டதாகவே தெரிகிறது

இந்த வார நாமினேஷனில் இருந்து இதன்மூலம் மீரா தப்பித்து, சேரன் அல்லது சரவணனை வெளியேற்ற அவர் செய்து வரும் ஐடியா பலித்துவிடும்போல் தெரிகிறது.

இந்த புரமோவில் சேரன் கோபப்படுவதை பார்த்தால் நிச்சயம் அவர் மீது பார்வையாளர்களுக்கு வெறுப்பு வரும். இது மீராவுக்கு மிகப்பெரிய பாசிட்டிவ் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.