close
Choose your channels

அத்திவரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த் குடும்பத்தினர்

Tuesday, July 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதரை காண தினமும் லட்சக் கணக்கான மக்கள் திரள்கிறார்கள். அத்திவரதரை ஜனாதிபதி உள்பட பல விவிஐபிக்களும், அரசியல் தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் குடும்பத்தினர் தற்போது அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா மற்றும் ரஜினியின் பேரக்குழந்தைகள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக நேற்று இரவு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சென்ற ரஜினி குடும்பத்தினர்களுக்கு வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ரஜினி குடும்பத்தினர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ள நிலையில் விரைவில் ரஜினியும் அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.