close
Choose your channels

எல்லாரும் பின்னாடிதான் பேசுறாங்க: மோகனுடன் மோதிய சாக்சி

Tuesday, July 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒரு நட்சத்திர சிறை போன்ற இடத்தில் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் அவர்களின் பேச்சு பெரும்பாலும் அவர்களுக்குள்ளே இருக்கும். ஒருவரை பற்றி இன்னொருவர் புகழ்ந்தும், இகழ்ந்தும் பேசியே பிரச்சனையை வளர்த்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் மோகன் வைத்யா, கேப்டன் சாக்சியிடம் தனக்கு தண்ணீர் ஒத்து கொள்வதில்லை என்றும், தன்னால் பாத்ரூம் சுத்தம் செய்ய முடியவில்லை என்றும், அதனால் தனக்கு வேறு வேலை ஒதுக்குமாறும் கூறுகிறார்.

இந்த விஷயத்தை சாக்சி, ரேஷ்மாவிடம் கூறிக்கொண்டிருக்கும்போது அங்கும் வரும் மோகன் வைத்யா, 'எதுவாக இருந்தாலும் நேரடியாக பேச வேண்டியதுதானே என்று சாக்சியிடம் கேட்க, அதற்கு சாக்சி, 'இங்குள்ள யாரும் நேரடியாக பேசுவதில்லை, எல்லாரும் பின்னாடிதான் பேசுறாங்க' என்று கூறுகிறார்.

ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் மோகன் வைத்யா சிக்குவதால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.