close
Choose your channels

என் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்

Sunday, October 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன் யாரை எவிக்சன் செய்வது என்பது குறித்த போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். கடந்த முறை எவிக்சன் செய்யப்படுபவர் யாரென்று சரியாக கணித்து சொன்ன ஆஜித், இந்த முறையும் சொல்லலாம் என்று ஒரு வாய்ப்பை கமல் அவருக்கு கொடுக்கிறார்

இதனை அடுத்து அவர் ’தன்மீதே தனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றும், தான் இந்த வாரம் வெளியேறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார். ஆஜித் இவ்வாறு கூறும்போது அவரை கேப்ரில்லா கவலையுடன் பார்க்கிறார் என்பது குறிப்பிடதக்கது. ஆஜித் சொல்வது போல் அவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா என்பதை பார்ப்போம் என்று கமல் கூறுவதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது

இந்த நிலையில் இந்த வாரம் ஆஜித் எவிக்சன் செய்யப்படுகிறார் என்றும் ஆனால் அவரிடம் இருக்கும் எவிக்சன் பாஸ் காரணமாக அவர் காப்பாற்றப்பட்டதால் இந்த வாரம் எவிக்சன் இல்லை என்றும் வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் ஆஜித், தன்னை அனைவரும் சின்ன பையன் என்று கூறவதை தான் விரும்பவில்லை என்றும் தனக்கும் இங்கு நடப்பது என்னவென்று தெரியும் என்றும் இனிமேல் யாராவது தன்னை சின்னப்பையன், ஒன்றும் தெரியாது என்று கூறினால், தான் எதிர்த்துப் பேச போவதாகவும் கூறியதை பார்க்கும்போது, இந்த வாரம் காப்பாற்றப்படும் ஆஜித், அடுத்த வாரம் முதல், ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.