பிக்பாஸை கன்ஃப்யூஸ் செய்து சிரிக்க வைத்தவர்: அனிதா கேலி செய்வது யாரை?

பிக்பாஸையே கன்ஃப்யூஸ் செய்து அவரையே சிரிக்க வைத்தவர் இவர் ஒருவர்தான் என ரம்யாவை அனிதா கேலி செய்யும் இரண்டாவது புரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது 

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் கன்பெக்சன் அறைக்கு ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து இந்த 70 நாள்களில் நீங்கள் இந்த வீட்டில் பெற்ற அனுபவம் என்ன? பிக்பாஸ் வீட்டின் வெளியே நீங்கள் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்பது குறித்த கேள்வியை கேட்டார். ஷிவானி முதல் அர்ச்சனா வரை இந்த கன்பெக்சன் அறைக்கு வந்தவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் உடைந்து கதறி அழுதார்கள் என்பதும் கண்ணீருடனே வெளியே சென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் சற்றுமுன் கன்பெக்சன் அறைக்கு சென்ற ரம்யா உள்ளேயும் வெளியேயும் சிரித்தபடியே இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த பிக்பாஸ் வீட்டில் வாழ்க்கை எப்படி இருந்தது என்று கேட்டபோது ’எனக்கு யாரிடமாவது பிடிக்கவில்லை என்றால் நான் அவரிடத்தில் இருந்து விலகி கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்வேன் என்றும் அதே இடத்தில் இருக்க மாட்டேன் என்றும் ரம்யா கூறினார்.

அதனை அடுத்து ’எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அந்த நேரத்தில் அதை எல்லாம் பண்ணி கொண்டிருப்பேன் என்றும், இந்த வீட்டில் அழுகையில் உண்மை, பொய் என இரண்டும் பார்க்கலாம் என்றும் கூறினார்

இந்த நிலையில் திடீரென ’பிக்பாஸ் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்று கேட்க அதற்கு பிக்பாஸ், ‘நான் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து கன்பெக்சன் அறையில் இருந்து சிரித்துக்கொண்டே ரம்யா வெளியே வரும் காட்சியும் அனிதா வரை பார்த்து ’பிக்பாஸையே கன்ஃப்யூஸ் செய்து அவரையே சிரிக்க வைத்தவர் ரம்யா பாண்டியன் என்று செய்தி வாசிப்பது போல கேலி செய்யும் காட்சியுடனும் இன்றைய 2-வது புரமோ முடிவுக்கு வருகிறது

More News

25 வயது இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர் கைது!

25 வயது இளம் நடிகைக்கு 25 வயது இயக்குனர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய பிக்பாஸ் கவர்ச்சி நடிகை! வைரல் வீடியோ!

நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்

பிக்பாஸ் ரியோவுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி: என்ன தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'

மதுவிருந்தில் கலந்து கொண்ட பெண் டி.எஸ்.பி மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?

மது விருந்தில் கலந்து கொண்ட பெண் டிஎஸ்பி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது பெங்களூர் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் தமிழ் நடிகை!

அந்தரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு யோகா செய்யும் தமிழ் நடிகையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது