close
Choose your channels

25 வயது இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர் கைது!

Friday, December 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

25 வயது இளம் நடிகைக்கு 25 வயது இயக்குனர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உடுமலைப்பேட்டையை சேர்ந்த 25 வயது ரஞ்சித் என்பவர் ‘மூன்று பேர்’ என்ற வெப்தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் கதாநாயகியாக 25 வயது இளம் நடிகை ஒருவர் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இந்த வெப்தொடரின் படப்பிடிப்பின்போது இயக்குனர் ரஞ்சித் அந்த நடிகையிடம் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்ததாகவும் அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து பல முறை இதனை கண்டித்த நடிகை, ஒரு கட்டத்தில் ரஞ்சித் எல்லை மீறிப் போகவே கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இயக்குனர் ரஞ்சித் மற்றும் அவருடைய உதவி இயக்குனர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் நடிகைக்கு ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

இளம் நடிகை ஒருவருக்கு இயக்குனர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டு இருப்பது கோலிவுட்ட்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.