close
Choose your channels

சம்யுக்தா பெயரை சொன்ன பாலாஜி: கடுப்புடன்  முறைத்த சுசி!

Sunday, November 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவிருக்கும் நிலையில் நாமினேஷன் செய்யப்பட்ட அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ரியோ, பாலாஜி மற்றும் சுசி ஆகியோர்களில் சோம், ஆரி, பாலாஜி, ரியோ ஆகியோர் ஏற்கனவே காப்பாற்றப்பட்ட நிலையில் சுசித்ரா, அனிதா மற்றும் சம்யுக்தா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் இந்த மூவரில் ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்றால் யாரை காப்பாற்றலாம் என கமல்ஹாசன் கேட்க, முதலில் பாலாஜி, சம்யுக்தா பெயரை கூறுகிறார். தன்னிடம் நெருக்கமாக பழகிய பாலாஜி தன்னுடைய பெயரை சொல்லாதது சுசிக்கு அதிர்ச்சியாக இருந்ததால் அவரை பார்த்து முறைத்தார். அதன்பின் அர்ச்சனா, சோம், ரியோ உள்பட ஒருசிலர் சம்யுக்தாவின் பெயரையே கூறியதால் சம்யுக்தா காப்பாற்றப்பட்டார்.

அதன்பின் அனிதா மற்றும் சுசித்ரா ஆகிய இருவரில் சுசி வெளியேற்றப்பட்டது இன்றைய மூன்றாவது புரமோவில் இருந்து தெரிய வந்துள்ளது. வெளியேறிபவர்களை வழியனுப்பிவிட்டு போட்டியாளர்கள் அனைவரும் சோகத்துடன் திரும்பும் காட்சியில் சுசி மட்டும் இல்லை என்பதால் சுசி வெளியேறியது உறுதியாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.