close
Choose your channels

தாமரை செல்வியை மீண்டும் அழவைத்த அபிஷேக்!

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவர் தனது சொந்த கதையை கூறிய நிலையில், ‘தனது மகனை தான் பிரிந்து இருப்பதாகவும் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததே தனது மகனுடன் சேரவேண்டும் என்பதற்காக தான் என்றும் அழுதவாறு கூறிய வீடியோ வைரல் ஆகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தாமரைச்செல்விக்கு ஆதரவாக பேசிய அபிஷேக் மீண்டும் அவரை அழ வைத்துவிட்டார். அவர் இது குறித்து கூறிய போது ’நீ இந்த ஷோவுக்கு வந்ததே யாரோ ஒருத்தர் செய்த முடிவு அல்ல, பலபேரோட முடிவு. இந்த முடிவில் எதற்காக என்றால் உன்னுடைய கதை இந்த உலகம் முழுவதும் காட்ட வேண்டும் என்பதற்காக தான்!

உன்னுடைய மகன் கண்டிப்பாக உன்னுடன் வரத்தான் போகிறார். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. இது ஒரு தாயோட குமுறல். எவன் பேசி எவன் மனசுல இருந்துச்சோ இல்லையோ தெரியலை, உன் பேச்சு பல பேரை சென்று அடையும்’ என்று ஆறுதல் கூற உடனே மீண்டும் தாமரை செல்வி கதறி அழுக தொடங்கிவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.