close
Choose your channels

வெளியே போகவும் தயார், நிரூப் சொன்னதை செய்ய முடியாது: அக்சரா ஆவேசம்

Monday, November 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வீட்டை விட்டு வெளியே செல்லக்கூட தயார், ஆனால் நிரூப் சொன்னதை செய்ய முடியாது என பிக்பாஸ் இடம் அக்சரா ஆவேசமாக கூறும் காட்சியின் வீடியோ இன்றைய முதல் புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் ஐந்து நபர்கள் காயின்களை கைப்பற்றி உள்ளனர் என்பதும் நீர் நிலம் நெருப்பு ஆகாயம் காற்று என்ற பஞ்சபூதங்கள் கொண்ட இந்த காயின்களுக்கு பல சக்திகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெருப்பு என்ற காயினை வைத்துள்ள நிரூப், இந்த வாரம் முழுவதும் தனக்கு உதவியாளராக வீட்டில் உள்ள பெண்களில் யாராவது ஒருவரை நியமனம் செய்து கொள்ளலாம் என பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து தனது உதவியாளராக அவர் அக்ஷராவை நியமிக்கிறார்.

இதனை அடுத்து அக்ஷரா தனக்கு நிரூப் உதவியாளராக இருக்க விருப்பமில்லை என்றும் அதற்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்றும் அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என்றால் கூட தயார் என்றும் கூறுகிறார். இதைத்தான் நானும் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் அக்ஷராவை இன்னும் வீட்டிலேயே வைத்திருக்கின்றீர்கள் என்று நிரூப் கூறும் காட்சிகளுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய புரமோவில் இருந்து இன்று நிரூப் மற்றும் அக்ஷரா இடையே ஒரு பஞ்சாயத்து உள்ளது என்பது உறுதியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.