close
Choose your channels

பாவனியை சமாளிக்க முடியாமல் திணறுகிறாரா ராஜூ?

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 45வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த 45 நாட்களில் போட்டியாளர்களுக்கு இடையே பல சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே ராஜு ஜெயமோகன் மற்றும் பாவனி ஆகியோர் இடையே அவ்வப்போது சின்னச் சின்ன கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில் இன்று அந்த மோதல் பெரிதாவது போல் தெரிகிறது

இன்றைய 2-வது புரமோவில், ‘என்னை பற்றி எப்போதுமே ஒருசில தப்பான வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், மற்றவர்களை பற்றி எல்லாம் நல்ல விதமாக சொல்லும் நீங்கள், என்னை பற்றி மட்டும் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று பாவனி கேட்க அதற்கு விளக்கம் அளிக்கும் ராஜூ, ‘உன்னை பற்றி ஒரு சந்தேகமான பார்வையுடன் நினைத்து உன்னுடன் பேசுவது தான் தவறு, ஆனால் நான் உன்னிடம் இருந்து விலகி இருக்கின்றேன்’ என்று கூறி மழுப்புகிறார். இதில் இருந்து பாவனி கேட்கும் நேரடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ராஜூ திணறுவதாக நெட்டிசன்களின் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

இன்றைய புரமோவில் இருந்து ராஜூ மற்றும் பாவனி இடையே ஒரு வார்த்தைப்போர் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.