close
Choose your channels

அபிஷேக்கை கொளுத்தி போட்ட அண்ணாச்சி: டென்ஷன் ஆன சிபி!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அபிஷேக்கை கொளுத்திப் போடும் நபர் என அண்ணாச்சி கூறியதை அடுத்து சிபி டென்ஷனான காட்சிகளின் வீடியோ இன்றைய முதல் புரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தான் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறலாம். குறிப்பாக அபிஷேக்கால் போட்டியாளர்கள் சிலருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் நெருப்பு போன்றவர் யார் என்பது குறித்த உரையாடல் நடைபெற்று வருகிறது. அப்போது சிபி பேசியபோது ’நான் என்னையே நெருப்பாக பார்த்துக்கொள்கிறேன், யாராவது கைவிட்டு, கால்விட்டு பார்க்க வேண்டுமென்று நினைத்தார்கள் என்றால் சுட்டு விடுவேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து தாமரைச்செல்வி ’நான் நெருப்பாக இமான் அண்ணாச்சியை பார்க்கிறேன் என்றும் அவர் நல்ல நகைச்சுவை செய்து வருகிறார் என்றும் ஆனால் திடீரென எப்போது அவருடைய குணம் மாறும் என்பதே தெரியாது என்றும் அவர் கூறுகிறார்.

இதனை அடுத்து அண்ணாச்சி, ‘அபிஷேக் அவர்கள் மீது எனக்குள் ஒரு குறை இருக்கின்றது என்றும் கொளுத்தி போடும் நெருப்பாக அபிஷேக் இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று கூறுகிறார். அப்போது உடனே டென்ஷனான சிபி, ‘அபிஷேக் பற்றி நீங்கள் சொன்னது எனக்கு தவறாக தெரிகிறது என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.