close
Choose your channels

பிரியங்காவுக்கு மக்கள் போட்ட குறும்படம்: கமலும் போடுவாரா என எதிர்பார்ப்பு!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது மட்டுமன்றி ஆரம்ப நாட்களில் அவர் பிக்பாஸையே கலாய்த்து செம ஜாலியாக விளையாடியதால் அவரை அனைவருக்கும் பிடித்தது. ஆனால் நாளாக ஆக அவரது விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அக்ஷராவை அவர் கார்னர் செய்வது ஏன் என்பது பலருக்குப் புரியவில்லை. இந்த நிலையில் நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அக்ஷராவிடம் பிரியங்கா கூறியபோது ’நீ ஏதோ எழுதி கேமராவில் காண்பித்து விட்டு அதன் பின்னர் கக்கூசில் போடுகிறாய். அதில் நீ என்ன எழுதியிருக்கிறாய் என்று எங்களுக்கு தெரியாது. 

நாங்க இங்கே சத்தமா பேசுவதால் நாங்கள் திட்டம் போடுவது மாதிரியும்,  நீ மட்டும் எழுதி அதை கக்கூசில் போடுவதால் நீயா ஐயோ அம்மா பொண்ணு பீலிங் வர்ற மாதிரியும் அது வெளியே தெரியும். எனவே  அது செம கேம் என் தெரிகிறது. அது நல்லா இல்லை என்று பிரியங்கா கூறுகிறார்.

ஆனால் அதே பிரியங்கா தனது அணியில் உள்ள நிரூப் இடம் கையில் மறைத்து வைத்து சில விஷயங்களை எழுதிக் காட்டுகிறார். அக்ஷராவை குற்றம் சொல்லும் பிரியங்காவும் அதே குற்றத்தை தான் செய்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் நெட்டிசன்கள் போட்ட இந்த குறும்படத்தை கமல்ஹாசனும் போட வேண்டும் என்றும் அப்போது அவரது முகத்தில் தெரியும் ரியாக்ஷனை என்ன என்பதை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதே பார்வையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால் பிரியங்கா, இன்னொரு அர்ச்சனா ஆகிவிடுவாரோ என்ற அச்சமும் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.