close
Choose your channels

கலகலன்னு இருந்த பிரியங்காவை புலம்ப வைத்த பிக்பாஸ்!

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரியங்கா எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் கலகல என்று பேசிக் கொண்டிருந்தவரை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்று புலம்ப வைத்துவிட்டார் பிக்பாஸ் என இன்றைய அடுத்த புரமோவில் இருந்து தெரியவருகிறது

இன்றைய மூன்றாவது புரமோவில் அக்ஷரா குறித்து அண்ணாச்சி பேசிய விதம் குறித்து ராஜுவிடம் பிரியங்கா கூறுகிறார். அந்த இடத்தில் யாராக இருந்தாலும் மனம் கஷ்டப்படுவார்கள் என்றும், பாராட்ட வேண்டிய இடத்தில் விமர்சனம் செய்ததால் அக்ஷராவால் தாங்க முடியாமல் போனது என்று கூறுகிறார். அதை ராஜூவும் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் திடீரென இதோ வந்து விடுகிறேன் என்று அந்த இடத்தை விட்டு ராஜூ கிளம்ப, இதனை அடுத்து தன்னுடைய பேச்சு பிடிக்காமல்தான் ராஜூ செல்கிறாரோ என்று நினைத்துக் கொண்ட பிரியங்கா, தனியாக புலம்ப ஆரம்பித்தார்

இந்த வீட்டில் ஏதாவது சொன்னாலும் தப்பு, சொல்லணும்னு நினைச்சாலும் தப்பு, சொல்லாமல் இருந்தாலும் தப்பு என்று தனியாக புலம்புகிறார். இதனை அடுத்து பிரியங்காவையே புலம்பவிட்டுட்டாங்களே என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.