close
Choose your channels

மம்தாவை கட்டிப்பிடிப்பேன் என்று கூறியவருக்கு கொரோனா: சொன்னதை செய்வாரா?

Friday, October 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்தியில் பாஜக மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததில் இருந்து ஒரு சில பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பொது மேடைகளில் பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அனுபம் ஹஸ்ரா என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ’தங்கள் கட்சியினர் கொரோனாவோடு மட்டுமின்றி மம்தா பானர்ஜி உடனும் போராடி வருவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனக்கு ஒரு வேளை கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தான் நேராக சென்று முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்றும் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அனுபம் ஹஸ்ரா பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று கூறிய அனுபம் ஹஸ்ரா அவர்களுக்கு தற்போது உண்மையிலேயே கொரோனா வந்துவிட்டது. இதனை அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை அடுத்து அவர் சொன்னதை செய்வாரா என்று நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.