close
Choose your channels

'கோ 2' முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. இயக்குனர் சரத்

Wednesday, July 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீவா, கார்த்திகா நாயர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய மாபெரும் வெற்றிப்படமான 'கோ' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருவது குறித்து நாம் அறிந்ததே. தேசிய விருது பெற்ற பிரகாஷ்ராஜ் மற்றும் பாபிசிம்ஹா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை சரத் இயக்கி வருகிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் சரத் பேட்டி அளித்தார்.

அவர் தனது பேட்டியில், 'இந்த படம் 'கோ' படத்தின் இரண்டாம் பாகமாக இருப்பினும், முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது. ஆனால் முதல் படத்தில் இருந்த பாலிட்டிக் த்ரில்லிங் உள்பட அத்தனை அம்சங்களும் கண்டிப்பாக இதிலும் இருக்கும்.

முதல் படத்திலேயே தற்போது இருக்கும் டிரெண்டில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான கதையை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இந்த பாலிட்டிக் த்ரில்லரை தேர்வு செய்தேன். என்னுடைய இந்த முயற்சிக்கு ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனமும் ஒத்துழைப்பு கொடுத்தது.

இரண்டு தேசிய விருதுகள் பெற்ற நடிகர்களை இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. இந்த படத்தின் கதையை கேட்டதும் இருவருமே உற்சாகமடைந்து தங்களின் அதிகபட்ச உழைப்பை கொடுத்துள்ளனர்.

இந்த படத்தில் லியோன் ஜேம்ஸ் என்ற இசையமைப்பாளரை அறிமுகப் படுத்தியுள்ளேன். இன்றைய போட்டி உலகில் இவர் நிறைய சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இந்த படத்திற்காக இவர் இசை அமைத்து கொடுத்து உள்ள பாடல்களே அதற்கு அத்தாட்சி" என்று சரத் கூறியுள்ளார்.

இந்த படத்தில் 'டார்லிங்' பட நாயகி நிகில் கல்ரணி நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.