close
Choose your channels

கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை: அதிர்ச்சி தகவல்

Wednesday, April 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்ப்பமாக இருக்கும் போது தற்கொலைக்கு முயன்றதாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல சீரியல் மற்றும் பாலிவுட் நடிகை சவும்யா சேத். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அருண் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது தனது 3 வயது மகன் மற்றும் பெற்றோர்களுடன் சவும்யா சேத் அமெரிக்காவில் வசித்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின் போது சவும்யா சேத் கூறுகையில் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தற்கொலை எண்ணம் ஆகியவை குறித்து தெரிவித்துள்ளார்

கணவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்போது தான் கர்ப்பமாக இருந்ததாகவும் ஆனால் தன்னுடைய பெற்றோர் தான் தனக்கு ஆறுதல் கூறி தற்கொலை எண்ணத்தில் இருந்து என்னை காப்பாற்றினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை நான் அப்போது கர்ப்பமாக இருக்கும்போதே தற்கொலை செய்து இருந்தால் என்னுடைய அன்பான மகனை பார்க்காமலேயே போய் இருக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.