close
Choose your channels

தந்தை மறைவுக்கு பின் பள்ளி சென்ற 5 வயது சிறுவனுக்கு அணிவகுப்பு மரியாதை

Wednesday, May 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவை சேர்ந்த இண்டியானா என்ற பகுதியில் கடந்த 4ஆம் தேதி காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில் மறைந்த காவல்துறை அதிகாரியின் 5 வயது மகன் முதல்முறையாக பள்ளிக்கு செல்லும்போது அந்த சிறுவனை வழியனுப்ப 70 காவல்துறையை சேர்ந்தவர்கள் அணிவகுப்பு மரியாதை செய்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை மறைவிற்கு பின்னர் பள்ளி செல்ல மறுத்த அந்த சிறுவன், தனக்கு துணையாக ஒரே ஒரு போலீஸ் அதிகாரியாவது வரவேண்டும் என்று தாயாரிடம் கூறியதாகவும், இதனை அறிந்த இண்டியானா காவல்துறை 70 காவல்துறையினர்களை அனுப்பி, அந்த சிறுவனை பள்ளிக்கு வழியனுப்பி வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒரு அதிகாரி தன்னுடைய சீருடை மற்றும் பேட்ஜை அந்த சிறுவனிடம் கொடுத்து கெளரவப்படுத்தினார். தந்தையை இழந்த அந்த சிறுவனுக்கு தாங்கள் அனைவரும் தந்தையாக இருப்போம் என்று அவர்கள் எடுத்து கொண்ட உறுதிமொழி அனைவரையும் கண்கலங்க வைத்தது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.